திங்கள், ஏப்ரல் 16, 2012

.


ஏகஇறைவனின் திருப்பெயரால்....
கொள்ளை போகும் பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள மக்கள் சொத்து.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

திருவனந்தபுரத்தை ஆண்ட மன்னர் மார்த்தாண்ட வர்மா
17ம் நூற்றாண்டில் பாதாள அறைகளுடன் கூடிய பத்மநாபசுவாமி கோயிலை கட்டியதாக வரலாறுகள் கூறுகின்றன. 

மேல்படி பாதாள அறைகளில் ஏராளமான தங்கம், வைரத்தினாலான விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள் குவியல் குவியலாக சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட செய்திகளை அறிந்தோம்.

அவைகள் இன்னும் துல்லியமாக மதிப்பீடு செய்து முடிக்கப்படவில்லை என்றாலும் சுமார் லட்சம் கோடியை தாண்டலாம் என்று தோரயமாக கணிக்கப்பட்டுள்ளன.

மேல்படி பொக்கிஷங்கள் அரசுக்கு உரியவை என்றும் மேல்படி கோயில் அரசின் கீழ் அறக்கட்டளை அமைத்து செயல் பட வேண்டும் என்றும்  கேரள உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது.

கேரள உயர்நீதி மன்றம் அளித்தத் தீர்ப்பை ஏற்க மறுத்த மன்னர் குடும்பம் இக்கோயிலில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷங்கள் மன்னர் குடும்பத்திற்கு சொந்தமானவை என்றும், இக்கோயில் சம்மந்தமான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளது.

இது மன்னர் குடும்பத்துக்கு சொந்தமா ?  அல்லது அரசுக்கு சொந்தமா ? என்பதை உச்ச நீதி மன்றம் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்.

நாளுக்கு நாள் ஆபரணங்களின் விலை ஏறிக்கொண்டு செல்வதால் தீர்ப்பு வெளியாகும் போதெல்லாம் அதன் மதிப்பு இதை விட பல மடங்கு அதிகரித்திருக்கலாம் ஆனால் பலமான பாதுகாப்புகளுக்கு மத்தியிலும் மேல்படி பொக்கிஷங்கள் சிறிது சிறிதாக களவாடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருவதால் அப்பொழுது பொக்கிஷங்களின் எண்ணிக்கை இதை விட பல மடங்கு குறைந்தே இருக்கும். அதனால் பொக்கிஷங்கள் அரசுக்கு வந்து சேருவதற்குள் பொக்கிஷங்களின் மதிப்பைத் தாண்டி விடலாம் அதற்கான பாதுகாப்பு செலவுகள்.

இதன் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டத் தொகை 41 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது இதில் பொறுத்தப்பட்டுள்ள ரேடார் வசதி உள்ள கேராமாவின் விலை மதிப்பு மட்டும் 11 கோடி ரூபாயாம் ? மாநில முதல்வர் உம்மன் சான்டி அவர்களே இதை நேரில் சென்றுத் திறந்து வைத்துள்ளார்.

கோயிலை ஒட்டியுள்ள கடைகள், நடைபாதை கடைகள் அனைத்தும் அப்புறப் படுத்தப்பட்டு கோயிலின் நான்கு வாசல்களிலும் கமாண்டோ போலீஸார் நிருத்தப்பட்டு, கோயிலைச் சுற்றியும் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய போலீஸார் ரோந்து சுற்றி வர  ஏற்பாடு செய்யப்பட்டு வயர்லெஸ் வசதியுடன் போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளதாம் ?.

வம்சமே அழிந்து விடும் ?!
திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரின் அறக்கட்டளையின் கீழ் மேல்படி கோயில்  நிர்வாகம் இயங்குவதால் பொக்கிஷங்கள் இருக்கும் ரகசிய அறைகளை அவ்வப்பொழுது திறப்பதற்கும், மூடுவதற்கும் கோயில் நிர்வாகம் தாராள அனுமதி அளித்து வந்ததையறிந்தே பொக்கிஷங்கள் மன்னர் குடும்பத்தினர் மூலம் கடத்தப்படலாம் என்று சந்தேகித்த மறைந்த சுந்தர்ராஜ் ஐயர் திருவனந்தபுரம் நீதி மன்றத்தில் பொது நலன் வழக்குத் தொடர்ந்தார் அதன் பின்னரே கேரள உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்து முன்னாள் நீதிபதி எம்.என்.கிருஷ்னன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினரைக் கொண்டு கடந்த ஜூன் 27ம் தேதி ஐந்து அறைகள் திறக்கப்பட்டு மேல்படி பொக்கிஷங்கள் கணக்கெடுக்கப்பட்டது.

ஆறாவது அறை திறந்தால் திறப்பவரின் வம்சமே அழிந்து விடும் என்றும், நாட்டின் பாதுகாப்புக்கே ஆபத்து ஏற்படலாம் என்றும் மூலவர் கடும் கோபத்தில் இருப்பதாக பிரசன்னத்தில் தெரிவதாகக் கூறி 6வது அறையை திறக்க விடாமல் அரசுக்கு முட்டுக்கட்டை இட்டு வந்தனர் கோயில் நிர்வாகத்தினர்.

மன்னர் உத்திராடம் திருநாள் ஆறாவது அறையைத் திறந்து ஏராளமான பொக்கிஷங்களை அள்ளிக்கொண்டுப் போவதாக கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் இரகசியமாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றஞ்சாட்டி தேவபிரசன்ன மிரட்டலை பொருட்படுத்தாமல் உடனடியாக ஆறாவது அறையைத் திறக்கச்சொல்லி அரசுக்கு ஆர்வமூட்டினார்.

இதன் பின்னரே தொல்லியல் துறை நிபுனர்களை வைத்து 6வது இரகசிய அறையைத் திறந்து அதில் காணப்பட்ட பொக்கிஷங்களை அரசு அறிவித்தது. 

ஆனால் அரசு இந்த அறையை திறப்பதற்கு முன்பே இந்த அறை இரண்டு முறை திறந்து மூடப்பட்டதற்கான ஆதாரம் இருப்பதாக உடன் இருந்த தொல்லியல்துறை அதிகாரிகள் அறிவித்தனர். (இதன் மூலம் மூலவர் கோபத்தில் இருக்கிறார் என்ற கரடியை அவிழ்த்து விட்டு அரசை தடுத்து நிருத்தி விட்டு இதன் இடைவெளியில்
6வது அறையை இரண்டு முறைத் திறந்து இயன்றளவு சுருட்டி உள்ளனர் என்பதும் தெளிவாகிறது. )

பாயாச வாளிக்குள் வைத்து கடத்தல்.
இதுவல்லாமல் மன்னர் உத்திராடம் திருநாள் கோயில் தரிசனம் முடிந்து திரும்பும் போது சில தடவை வாளியில் பாயாசத்தை நிரப்பி அவரே தன் கையில் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் போது அதில் மேல்படி பொக்கிஷங்களில் சிலவற்றை மறைத்து எடுத்துச் செல்வது வழக்கமாக இருந்து வந்திருக்கிறது இதைப் பார்த்த பூசாரி ஒருவர் மன்னரைத் தட்டிக்கேட்டு இதனால் மன்னர் உத்திராடத்திற்கும் பூசாரிக்கும் சலசலப்பு ஏற்பட்டு பரபரப்பு செய்திகாக வெளி வந்தது.

200 தங்குக் குடங்கள் அபேல்.
இதுவல்லாமல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மார்கழி திருவிழாவுக்காக 200 தங்கக் குடங்கள், நகைகள் சி மற்றும் டி அறைகளிலிருந்து எடுக்கப்பட்டு திருவிழா முடிந்தப் பிறகும் அவைகள் மீண்டும் அந்த அறைகளில் வைக்கப்படாமல் இருந்துள்ளனர் கோயில் நிர்வாகிகள்.

சி மற்றும் டி அறைகளிலிருந்து திருவிழாவுக்காக கோயில் நிர்வாகிகள் நகைகளை எடுப்பதை அறிந்த திருவனந்தபுரம் மாவட்ட சார்பு நீதிமன்றம் அவற்றை (சி மற்றும் டி அறைகளை) மட்டும் கண் காணிப்பதற்கென்று இரண்டு வழக்கறிஞர்கள் அடங்கிய குழுவை நியமித்திருந்தது.

மேல்படி 200 தங்கக் குடங்களையும் நகைகளையும் திருவிழா முடிந்தப் பின்னரும் மீண்டும் அதை எடுத்த அறைகளில் வைக்க மறுத்த கோயில் நிர்வாகிகளுக்கும் வக்கீல்களுக்கும் கடும் வாக்குவாதம் நடந்துள்ளது ஆனாலும் அவைகளை திரும்ப ஒப்படைக்க திட்டவட்டமாக மறுத்து விட்டனர் கோயில் நிர்வாகிகள்.

கடுப்பாகிப் போன வக்கீல்கள் ஜனவரி 15க்குள் 200 தங்கக் குடங்களையும் நகைகளையும் எடுத்த இடத்தில் மீண்டும் வைத்து விட உத்தரவிடவேண்டும் என்று திருவனந்தபுரம் மாவட்ட சார்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு மனுவை விசாரித்த நீதிபதி பாபு பிரகாஷ் ஜனவரி 13க்குள் அவைகளை எடுத்த அறைகளில் மீண்டும் வைத்து விடவேண்டும் என்று உத்தரவுப்பிறப் பிறப்பித்தார்.  அதன் பிறகு அது என்ன ஆனது என்றே இதுவரை யாருக்கும் தெரியவில்லை.

மதிப்பீட்டாளர்களால் எனும் போர்வையில்...
பொக்கிஷங்களின் மதிப்பீட்டுப் பணியில் நியமிக்கப்பட்டுள்ள 50 பேரில் 9 பேர் மேல்படி பொக்கிஷங்களை கடத்துவதாக அவர்களை மதிப்பீட்டுப் பணியிலிருந்து நீக்க வேண்டும் என்று மதிப்பீட்டுக் குழு தலைவர் வேலாயுத நாயர் 26-3-2012 அன்று உச்ச நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இதில் கோயில் நிர்வாக அதிகாரி ஹரிகுமாரும், தொல்பொருள் துறை இயக்குனர் ரெஜிகுமாரும் இணைந்து திட்டம் வகுத்து பொக்கிஷங்களை கடத்துவதாக கருதுவதாகவும் பொக்கிஷங்கள் குவிந்துள்ள பாதாள அறைகளின் சாவிகளை வைத்திருக்கும் கோயில் நிர்வாகிகளாகிய ரகு பிரகாஷ், சபரி வெங்கடாச்சலம், லெட்சுமி நாராயணன் மூவரும் மேல்படி கடத்தல் காரர்களுக்கு உடந்தையாக செயல்படுவதாகவும் கூறி அவர்களையும் பணியிலிருந்து மாற்றக் கோரி மதிப்பீட்டுக் குழு மற்றும் மேற்பார்வைக் குழுவின் அவசரக் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்து அதில் இயற்றப்பட்டத் தீர்மானத்தின் டிப்படையில் மேல்படி மனுதாக்கல் உச்ச நீதி மன்றத்தில் செய்யப்பட்டுள்ளது.

மேல்படி 9 பேரும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டிருப்பது இதன் பின்னர் ஆய்வு செய்த வகையில் அறிய வந்திருப்பதாக நுண்ணறிவு போலீஸார் கண்டு பிடித்துக் கூறி உள்ளனர். (இத்தனை பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டும் மதீப்பீட்டாளர்கள் எனும் போர்வையில் கிரிமினல்கள் உள்ளேப் புகுந்து விட்டதை அறிய முடியாமல் கோடிக்கணக்கில் செலவு செய்து பாதுகாப்புப் பணியை விஸ்தீரணப்படுத்தி அதைத் தொடர்வதில் என்ன அர்த்தம் இருக்கிறதோ தெரியவில்லை ?).

விழலுக்கு இறைக்கும் நீர் போல...
இந்த பாதுகாப்பு வசதிகளால் வெளியிலிருந்து கொள்ளையர்கள் கோயிலுக்குள் நுழைந்து பொக்கிஷங்களை அள்ளிக்கொண்டுப்போக துணிய மாட்டார்கள் அதற்கு மட்டும் தான் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பொருந்தலாம், ஆனால் உள்ளுக்குள் இருக்கும் கோயில் நிர்வாகிகளுக்கு, பொக்கிஷங்களின் மதிப்பீட்டாளர்களுக்கு, சாவிகளின் பொறுப்பாளர்களுக்கு, மன்னர் குடும்பத்தினருக்கு இது அறவேப் பொருந்தாது என்பதற்கு கேமராப் பொருத்தப்படுவதற்கு முன்பும், பொருத்தப்பட்டப் பின்பும் நடந்த கடத்தல்கள் மற்றும் ( பாயாச வாளியில் மறைத்து எடுத்துச் செல்லும் ) சுரண்டல்கள் சான்றாக அமைந்துள்ளது.

யார் இந்த பொக்கிஷங்களுக்கு உரிமைக் கோரினாலும் புதையல்கள் நாட்டின் அரசுடமை என்பது உலகம் முழுவதும் பின்பற்றும் சட்டம் என்பதால் அதிலும் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் ஆட்சிக்குட்பட்ட அரசின் கருவூலங்கள் தான் மேல்படி பொக்கிஷங்கள் என்பதால் அது அரசுக்குத் தான் சேரும்.

மன்னர்களின் ஆட்சி காலத்தில் மக்கள் செய்யும் குற்றங்களுக்கு தண்டனையாக தங்க நாணயங்கள் தங்கத்திலான செப்புகள்
, சிலைகளும் அபராதமாக விதிக்கப்பட்டு வந்தது அதனால் மேல்படி பொக்கிஷங்களில் அதிகமானவைகள் அபராதங்கள் மூலமாக மக்களிடம் வசூலித்தவைகளாகவும் இருக்கலாம் என்று அதிகமானோரால் கருதப்படுகிறது.

பாபர் மஸ்ஜித் நிலத்திற்கு உரிமை கோரியவர்களுக்கெல்லாம் ஆளுக்கொரு பங்கு பிரித்துக் கொடுத்ததைப் போன்று மேல்படி பொக்கிஷங்களுக்கு உரிமை கோரும் மன்னர் குடும்பத்திற்கு பாதியைப் பிரித்து நீதிமன்றம் கண்டிப்பாக கொடுக்காது.

காலம் கடந்து ஒற்றை வரியில் இது அரசுக்கு சொந்தம் என்ற தீர்பபை நீதிமன்றம் வாசிக்கும் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்த மன்னர் குடும்பத்தினர் மதிப்பீட்டாளர்கள் எனும் போர்வையில் நுழைந்திருக்கும் கிரிமினல்களுடனும், கோயில் நிர்வாகிகளுடனும் பேரத்தின் அடிப்படையில் பொக்கிஷங்களை திட்டம் வகுத்து சிறிது சிறிதாக எரிந்த வீட்டில் உருவியது மிச்சம் எனும் எண்ணத்தில் தொடர்ந்து கடத்தலாம்.

உள்ளுக்குள் உள்ளவர்கள் கடத்துவதை தடுக்க இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அவ்வளாகப் பயன்படப்போவதில்லை என்பது மேற்காணும் நிகழ்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டு விட்டதால் இதுவரை கடத்தியதுப் போக மீதமிருக்கும் பொக்கிஷங்களை உடனடியாக விற்று இந்தியா உலக வங்கியில் வாங்கிய கடனை அடைத்து விட்டு தடுக்கப்பட்ட கோயில் நடைபாதை வியாபாரிகளை மீண்டும் கடைகளை திறக்கச் சொல்லி உத்தரவிட்டு பாதுபாப்பபை அகற்றி விட்டால் நல்லது இல்லை என்றால் இது அரசுக்கு விழலுக்கு இறைக்கும் நீர் போன்றதாகவே அமையும்.

நம்பிக்கை கொண்டோரே! மத குருமார்களிலும், பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணுகின்றனர். அல்லாஹ்வின் வழியை விட்டும் (மக்களைத்) தடுக்கின்றனர்...
திருக்குர்ஆன் 9:34.

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்-3:104.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

சனி, ஏப்ரல் 14, 2012

.

ஏகஇறைவனின் திருப்பெயரால்....
காலம் கடந்த ஞானோதயம்.
சென்னை உயர் நீதி மன்றக் கதவுகளை தட்டியது ஒரு விசித்திரமான வழக்கு விரைந்து கதவுகளைத் திறந்த நீதிமன்றம் திறந்த வேகத்தில் தள்ளி கதவுகளை தாழிட்டு மூடிக் கொண்டது.
என்ன தான் அந்த வழக்கு ?
சேலம் மாவட்டம் திண்டமங்கலத்தைச் சேர்ந்த பழநிச்சாமி என்பவர் எங்கள் ஊர் மாரியம்மன் திருவிழாவில் நடைபெற இருந்த இன்னிசை நிகழ்ச்சியை திண்டமங்கலம் போலீஸார் அநியாயமாக தடுத்து நிருத்தி விட்டனர் போலீஸாரின் தடையை நீக்கி இன்னிசை நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்குமாறுக் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி அவர்கள் இன்னிசை நிகழ்ச்சி என்ற பெயரிலும்> கலாச்சார நிகழ்ச்சி என்ற பெயரிலும் போற்றுதலுக்குரியப் பெண்மையை இழிவு படுத்தும் விதமாக கூலிக்கு கூத்தாடிப் பெண்களை அழைத்து வந்து டப்பாங்குத்துப் பாடல்களை ஒலிக்கச் செய்து மோசமான அசைவுகளுடன் ஆடச் செய்வதால் அதை ரத்து செய்யும் அதிகாரம் போலீஸாருக்கு கண்டிப்பாக உண்டு அதிலும் குறிப்பாக அம்மன் கோயிலுக்கு முன்பாக இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துவது அம்மனை இழிவுப் படுத்துவதாகவும் அமையும் என்பதால் போலீஸாரால் தடைசெய்யப்பட்ட மேல்படி நிகழ்ச்சியை மீண்டும் நடத்த  அனுமதிக்க முடியாது என்றுக் கூறி மனுவை தள்ளுபடி செய்து விட்டார்.
ஏகஇறைவனை எந்த ஓர் இடத்திலும் எவராலும் நிலை நிருத்த முடியாது.
மொத்த உலகுக்கும் இறைவன் ஒருவன் தான் அந்த ஓரிறைவனை மனிதர்கள் விரும்பும் ஒரிடத்தில் குடி அமர்த்த முடியவே முடியாது. அவன் தனி ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு தன் அளப்பெரும் ஆற்றலால் மொத்த உலகையும் கண் காணித்து இயக்குகிறான். 
இது போன்ற கோயில்கள்;> சர்ச்சுகள்> தர்ஹாக்கள் போன்ற குறிப்பிட்ட கட்டடங்களில் இறைவன் இருக்க மாட்டான் என்பதை நன்றாக அறிந்து வைத்திருக்கும் புரோகிதக் கூட்டம் இதை அறியாத அப்பாவி மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு இது போன்ற கட்டடங்களை விரசத்தை விதைத்து காசை அறுவடை செய்யும் ''க்ளப்'' கள் போன்று மாற்றி விட்டனர்.
இறைசக்தி இருப்பது உண்மை என்றால் ?
மேல்படி கட்டடங்களுக்குள் இறைசக்தி இருப்பது உண்மை என்றால் அந்த சக்தி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் கால்>கைகளை வளைத்துப்போடாமல் விடாது> ஆபாச நடனம் ஆடும் பெண்களின் இடுப்பை முறித்துப் போடாமலும் விடாது.
இது அசிங்கம் என்றும்> இது தீமை என்றும் ஐகோர்ட் நீதிபதிக்கு தெரியும் அளவுக்கு அம்மனுக்கு தெரியாமல் இருக்காது அதனால் அவைகள் வெறும் கட்டங்கள் தான் எந்த சக்தியும் அங்கு கிடையாது.  
இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தினால் தான் கூட்டம் கூடும்> கூட்டம் கூடினால் தான் உண்டியல் நிறையும். உண்டியல் நிறைந்தால் தான் ட்ரஸ்டிகளின் தொப்பை நிறையும் என்பதால் திட்டமிட்டே எவ்வித அச்சமுமின்றி நடத்துகின்றனர்.
இன்றும் தமிழகத்தின் கடல்கரை ஓரங்களை ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் காரணம் விளங்குகின்ற கோமான்(?)களின் தர்ஹாக்களில் இதைவிட கேவலமான நிகழ்ச்சிகள் விமரிசையாக மஹான்(?)களின் முன்னிலையில் நடத்தப்படுகின்றன> மஹான்(?)களின் நல்லாசியுடன் நடைபெற இருப்பதாக குறிப்பிட்டு பத்திரிகை அடித்து பகிரங்கமாக விநியோகிக்கின்றனர்.
மேல்படி விரசத்தைத் தூண்டும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்ற கட்டடங்களுக்கு அருகே விபச்சாரங்கள் பல்கிப்பெருகி விட்டது என்பது கூடுதல் தகவல்.
இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குமா ?
உயர் நீதி மன்றம் போலீஸாருக்கு வழங்கிய ஆபாச நடனத்தை ரத்து செய்யும் அதிகாரத்தை அனைத்து ஊர் போலீஸார்களும் திண்டமங்கலம் போலீஸார் போல் தடுத்து நிருத்த முயற்சி செய்வார்களா ? மேல்படி ஆபாச நிகழ்ச்;சிகளின் ஏற்பாட்டாளர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க முனைவார்களா
கன்டிப்பாக தடுக்கவும் மாட்டார்கள்> ஒடுக்கவும் மாட்டார்கள் காரணம் கோயில் மற்றும் தர்ஹா ட்ரஸ்டிகளின் தொப்பையை விட போலீஸ் காரர்களின் தொப்பை பெரிதாக இருப்பதால் பழம் நழுவி பாலில் விழுந்ததைப் போல் உள்ள உயர் நீதி மன்றம் வழங்கிய சலுகை குப்பைத் தொட்டிக்குப் போகவே அதிகம் வாய்ப்பு இருக்கிறது.
சிறந்த சமுதாயமாவது சிந்திக்குமா ?
உலகில் தோற்றுவிக்கப்பட்ட மொத்த சமுதாயத்திற்கும் முன்மாதிரி சமுதாயமாக முஸ்லீம் சமுதாயத்தை ஆக்கி இருக்கிறோம் என்று அல்லாஹ் தன் திருமறையில் நற்சான்று வழங்கி இருப்பதால் சிறந்த முஸ்லிம் சமுதாயமாவது இந்த தீமையை செய்யாமல் இருக்க முன் வர வேண்டும். 
நீங்கள் மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!... 3: 110.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்-3:104.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

வியாழன், ஜனவரி 26, 2012

24. லட்சம் ரூபாய் செலவில் எம்.ஜி.ஆருக்கு மீண்டும் ஒரு கோயில் (?)


சென்னையை அடுத்த திருநின்றவூரில் 24. லட்சம் ரூபாய் செலவில் எம்.ஜிஆருக்கு கோயில் கட்டப்பட்டு கோயிலின் உட்புறத்திலும், கோபுரத்திலும் எம்.ஜி.ஆர் சிலைகள் அமைக்கப்பட்டு ஐயர்கள் வேத மந்திரங்கள் ஓதி பூ, பழங்களுடன் தீபாராதனை ஏற்றி 108 குடங்களில் பாலாபிpஷேகம் செய்யபட்டு ஏராளமான பக்த(ரசிக)ர்கள் பயபக்தியுடன் எம்.ஜி.ஆர் சாமியை கும்பிட்டனராம். இதற்கு முன்னர் சென்னை பெரம்பூரில் அருள்மிகு எம்.ஜி.ஆர் ஆலயம் என்றப்பெயரில் முதல் கோயில் உள்ளது.


குஷ்புக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய பெருமை தமிழ்நாட்டுக்குரியது குஷ்பு ஃப்ரீ செக்ஸை ஆதரித்துப் பேசியதுடன், தமிழ்நாட்டுப் பெண்களும் இதில் சளைத்தவர்கள் அல்ல என்றக் கருத்தையும் சேர்த்துக்கூறி இருக்காவிடில் இந்நேரம் குஷ்புவின் கோயில்களின் கிளைகள் திருச்சியிலிருந்து கன்னியாகுமரி கடைக்கோடி வரை பரவி இருக்கும். ஃப்ரீ செக்ஸை ஆதரித்துப் பேசியதுடன் மட்டும் விட்டிருந்தால் கூட மக்கள் கண்டு கொண்டிருந்திருக்க மாட்டார்கள் ஆனால் தமிழ் சென்டிமென்டில் கை வைத்ததால் தான் குஷ்பு கோயில் திருச்சியுடன் நின்று விட்டது.

ஆனால் எம்.ஜி.ஆர்.கோயில் தமிழ்நாடு முழுவதும் பல கிளைகளைக் கொண்டதாக ஆவதற்கு அதிகம் வாய்ப்பிருக்கிறது காரணம் அவர் சினிமாவில் நல்லவராக, வல்லவராக நடித்தார் என்பதற்காக அல்ல. தமிழ் நாட்டு மக்கள் மொழி வெறியர்கள் என்பதை ஆரம்பத்திலேயே நன்றாக அறிந்து வைத்திருந்த கேரளத்து எம்.ஜி.ஆர் மூச்சுக்கு முன்னூரு தடவை தமிழ் தமிழ் என்று முழங்கி மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்து விட்டாலும் என் பேச்சிருக்கும் என்றுப் பாடி தமிழ் மக்களை தமிழால் குளிப்பாட்டி தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.

கொஞ்சு தமிழ் பேசும் தஞ்சை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த பச்சைத் தமிழன் சூரக்கோட்டை கனேசன் (சிவாஜி) சொந்த தொகுதியில் டொசிட்டை இழந்து ஒரு எம்.எல்.ஏ. வாகக் கூட வர முடியாததற்கு தமிழ் சென்டிமென்டை அவ்வளவாக சினிமாவில் அவர் டச் பண்ணாமல் விட்டதுதான் காரணம்.

இன்று எப்படியாவது ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து விடவேண்டும் என்பதற்காக தமிழ் என்றும், தமிழனம் என்றும் ஓயாமல் ஒப்பாரி வைக்கும் வை.கோ, சீமான் வரிசையில் ராமதாசும், இறுதியாக ஜவாஹிருல்லாஹ் சாரும் இணைந்து விட்டதை அறியலாம்.

மருதூர் கோபால மேனனின் மகன் இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) ஒரு மலையாளி என்பதுடன் தமிழ்நாட்டில் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் போது தமிழ் தமிழ் என்று கூவிக் கொண்டிருக்கும் போது அவருக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தது கேரளத்து பாலக்காட்டைச் சேர்ந்த பார்க்கவி என்கின்ற தங்கமணியாவார். தமிழர்களின் இதயதெய்வம் என்று தன்னை அறிமுகப்பத்திய எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டு அனாதை ஆசிரமத்திலிருந்து ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்காமல் கேரளத்து சகோதரி மகள் கீதாவை தத்து எடுத்து வளர்த்தார் அவரது கணவர் மதுமோகனும் மலையாளி ஆவார். சாவதற்கு முன்னரே அவரது பலகோடி மதிப்புள்ள ராமாவரம் பங்களாவை அவரை சிம்மாசனத்தில் அமர்த்தி அழகுப் பார்த்த தமிழ்நாட்டு ஏழைகளுக்கு பங்கிட்டுக் கொடுக்காமல் கேரளத்து கீதாவையும், மதுமோகனையும் குடியமர்த்தி விட்டு செத்து விட்டார்.

தான் ஒரு சிறந்த தமிழினக் காவலன் என்பதை இன்னும் அழுத்தமாக தமிழ்நாட்டு மக்களிடம் விதைப்பதற்காக இரத்த வெறிப் பிடித்த பிரபாகரனை வரவழைத்து தமிழீழம் உருவாக்குவதற்காக பிரிவினைப் போராட்டத்தை வலுப்படுத்தவும் அதற்கு தேவையான நிதி உதவிகளை செய்வதாகவும் வாக்களித்தார். பாலா, பேபி சுப்ரமனியன், சங்கரன் குழுவினருடன் 1984 ஏப்ரல் மாதம் எம்.ஜி.ஆரை சந்திக்கச் சென்ற பிரபாகரன் எம்.ஜி.ஆரிடம் நேரடியாக இரண்டு கோடி ரூபாய் கேட்க மறுப்பின்றி உடனேக் கொடுத்து இன்னும் தேவைப்பட்டாலும் கேளுங்கள் தருகிறேன் போராட்டத்தை வீரியப்படுத்துங்கள் என்று ஆக்கமும், ஊக்கமும் அளித்தார். அன்று எம்.ஜி.ஆர் அவ்வளவுப் பெரியத் தொகையை தந்திருக்கவில்லை என்றால் எங்களது எல்.டி.டி.இ அமைப்பு இத்தனை வீரியம் பெற்றிருக்காது என்று பிரபாகரனே பேட்டி அளித்திருந்தார்.

காத்தான் குடி பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த நிராயுதபானி முஸ்லீம்களை இரத்த வெறிப் பிடித்த புலிகள் குருவிகளை சுடுவது போல் சுட்டுத் தள்ளிய பொழுதும், யாழ்பானத்திலிருந்து மொத்த முஸ்லீம்களையும் விரட்டி அடித்த பொழுதும் இனவெறியர் எம்.ஜி.ஆர் உயிருடன் தான் இருந்தார். நான் இதற்காக பணம் கொடுத்து உதவ வில்லை உங்கள் இலக்கை மாற்றுங்கள் என்று ஒரு வார்த்தை பிரபாகரனிடம் எம்.ஜி.ஆர் கூறவில்லை. அப்பாவி முஸ்லீம்களின் துஆ இனவெறிப் பிடித்த எம்.ஜி.ஆரின் பணத்தால் வளர்ந்த எல்.டி.டி.யினாலேயே இலங்கையில் இன்று தமிழனம் அழிந்தது.

இத்துடன் விட்டாலாவதுப் பரவா இல்லை எனலாம் மக்கள் தன்னை கேரளாவுக்கு விரட்டி அடித்து விடக்கூடாது என்பதற்காக தான் ஒரு தமிழனக் காவலன் என்பதை மக்கள் மனங்களில் இன்னும் ஆழமாக விதைப்பதற்காக தமிழ்நாட்டு தீவிரவாதி ராமகோபாலனை வரவழைத்து இந்து முன்னனியை வலுப்படுத்தவும் தமிழ்நாடு முழுவதும் ஹிந்து எழுச்சி மாநாடுகளை நடத்துவதற்கும் ஆக்கமும், ஊக்கமும் அளித்தார் இதை அவரே சட்ட சபையிலும் ஒத்துக்கொண்டார் (பொருளாதார உதவி செய்தாரா என்பது தெரியவில்லை ).

இது ஏற்கனவே அறியப்பட்ட விஷயங்களாக இருந்தாலும் இன்றும் முஸ்லீம்கள் சினிமா நடிகர்களின் பின்னால் போய்க்கொண்டிருப்பதும் அவர்களில் சிலர் அரசியலில் வரும் பொழுது மறற் சமுதாயத்தவரை விட முஸ்லீம்கள் பேராதரவு அளித்து வருவதும் எம்.ஜி.ஆர் முதல் இன்றைய விஜயகாந்த வரை தொடருவதால் இது ஆபத்தானது என்பதை உணர்த்துவதற்காக எழுதப்படுகிறது. 

இன வெறி, மொழி வெறியைத் தூண்டி தீவிரவாதத்திற்கு வித்திட்டது மட்டுமல்லாமல் அனைவரும் கத்தியுடன் திரியுங்கள் எதிர்ப்பவர்களை சொருகி விடுங்கள் (போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டுகளை இழுத்துப்பூட்டி விடலாம்) என்று தமது ரெத்தத்தின் ரெத்தமான உடன் பிறப்புகளுக்கு ரெத்த வெறி ஊட்டினார்.

இத்தனைப் பெரிய லூசுக்கு, அரைவேக்காட்டுக்குத் தான் தமிழகத்தில் கோயில்கள் கட்டப்பட்டு எம்.ஜி.ஆர் சாமிக்கு ஜே போடத் தொடங்கி விட்டனர் அப்பாவி தமிழர்கள்.

கோயிலுக்குள்ளே இருக்கும் சிலைக்கு சொந்தக்காரர் ஒரு கூத்தாடி என்பதும், இனவெறியர், மொழி வெறியர் என்பதும் இந்த தலைமுறையினருக்கு மட்டுமேத் தெரியும் இன்னும் இரண்டு அல்லது மூன்று தலைமுறைக்குப் பின்னர் இந்த கோயில் உண்டியலின் வருமாணத்தை வைத்து வயிறு வளர்க்கும் பார்ப்பனக் கூட்டம் இது கூத்தாடி எம்.ஜி.ஆர் அல்ல ஸ்ரீ வீர கோபால மேனன ராஜ ராஜேஸ்வர  ராமச்சந்திர பகவான் என்றுப் பெயரை மோடிஃபை செய்து இவர் சினிமாவை எதிர்த்து போராட்டங்களை நடத்தி சிறை சென்ற சீர்திருத்தவாதி என்றும் சீரழிவுக் கலாச்சாராத்தை வெறுத்து துறவரம் பூண்டவர் என்றும் உல்ட்டா பில்டப் செய்து எழுதி வைக்கலாம்.

ஏன் என்றால் இதிலிருந்து மூன்றாவது நான்காவது தலைமுறையினரிடம் புருடா விடும்பொழுது டப்பாங்குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடிய எம்.ஜி.ஆர் தான் இவர் என்று சாட்சியாவதற்கு நாம் இருக்கப்போவதில்லை.
  
இப்படித் தான் இன்றைய தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய அளவில் உள்ள பிரசத்திப்பெற்ற ஹிந்து கோயில்கள், முஸ்லிம் தர்ஹாக்களில் அடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற  மஹான்(?)களின் பெயரில் எழுதி வைக்கப்பட்டுள்ளப் புல்லரிக்கும் சரித்திரங்களுமாகும். 
 
இவைகள் எல்லாம் உலட்டா பில்டப் என்பதற்கு கஃபத்துல்லாஹ்விற்குள் இப்ராஹீம்(அலை) அவர்களும், இஸ்மாயில்(அலை) அவர்களும் அம்பெய்து குறிகேட்பது போல் சித்திரம் வரைந்து ஜோதிடத்தை கடவுள் அனுமதித்திருப்பது போல் மக்களை ஏமாற்றி வயிறு வளர்த்தக் கூட்டத்தை இதுப் பொய் என்றும் இவ்வாறு அவர்கள் இருந்ததில்லை என்றும் இறைச்செய்தியை பெற்றுக் கொண்டிருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறி அச்சித்திரங்களை அழிக்க உத்தரவிட்டது மிகப்பெரிய உதாரணமாகும்.


அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் அவர்கள் ஏமாற்ற நினைக்கின்றனர். (உண்மையில்) தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை. திருக்குர்ஆன்.2:9




وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

மாம்பழ விநாயகர். (ஹிந்து அதிசயங்கள் )



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... 


இலங்கை கல்முனையில் ஒரு வீட்டில் வளர்ந்து வரும் மாமரம் ஒன்றில் ஒரு சில மாம்பழங்கள் யானையின் தும்பிக்கை சுருண்டிருப்பதைப் போன்று காட்சி அளித்திருக்கிறது. அது சிங்களவர் வீடல்லாது ஹிந்து சகோதரர் வீடு என்பதால் சொல்லவா வேண்டும். ?


அந்த மாம்பழங்கள் பயபக்தியுடன் பறிக்கப்பட்டு பாதுகாப்பாக எடுத்துச் சென்று பக்கத்தில் புலவி என்ற இடத்தில் நிறுவப்பட்டுள்ள விநாயகர் கோயிலில் எவர் சில்வர் தட்டில் பூக்கள் மற்றும் பூஜை பொருட்களுடன் வைத்து விநாயகர் பக்தர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு விநாயகர் பக்தர்கள் புடை சூழ வந்து பூஜை செய்து விட்டு மாம்பழ விநாயகரை அதிசயமாக பார்த்து செல்கின்றனராம்.(விநாயகர் பக்தர்களுடைய பக்தி எப்படிப்பட்டது என்பது அனைவரும் அறிந்தது தான் என்பது தனி விஷயம்) 


நல்ல வேளையாக அது தமிழ்நாட்டில் தோன்ற வில்லை. தமிழ் நாட்டில் மட்டும் தோன்றி இருந்தால் இதுவரை என்னென்வோ நடந்து முடிந்திருக்கும் ராமகோபாலன் வகையறாக்கள் அவற்றை தலையில் தூக்கிக்கொண்டு ஐஸ்ஹவுஸ் பள்ளிவாசல் வழியாக மேலதாளத்துடன் எடுத்துச் செல்ல போலீஸில் அனுமதிக்கேட்டு அடமாய் அடம் பிடித்திருப்பர் போலீஸ் மறுத்திருந்தால் அம்மா(?)அனுமதி கொடுத்திப்பார். 


நம்மவர்களிலும் சிலர் மீன் வயிற்றில் கலிமா எழுத்துக்கள் இருப்பதாகவும்> மாட்டின் கண்களில் கலிமா எழுத்துக்கள் தோன்றுவதாகவும்> வரிசையாக வளர்ந்துள்ள மரங்களின் அடி பாகங்கள் கலிமா எழுத்துக்களைப் போல் வளைந்து காணப்படுவதாகவும் இவைகள் இஸ்லாமிய அதிசயங்கள் போல பரப்புவார்கள். இவைகள் இஸ்லாமிய அதிசயங்கள் என்றால் அவைகளும் ஹிந்து அதிசயங்கள் தான். 


தாவரங்கள் சிலவற்றிலும்> உயிர் பிராணிகள் சிலவற்றிலும் இதுப் போன்ற காட்சிகள் ஏராளம் காணலாம் அதனால் இவைகளை மார்க்க அதிசயமாக பரப்ப வேண்டாம். அவர்களிடத்தில் சரக்கு இல்லை என்பதால் இதுப்போன்றவைகளை அதிசயம் என்றும் கடவுளின் அற்புதம் என்றும் கூறிப் பரப்புகின்றனர். 


நமக்கு திருக்குர்ஆனின் வசனங்களே அதிசயம் திருக்குர்ஆனில் கூறும் பிரபஞ்சத்தின் தோற்றம் அதிசயம்> திருக்குர்ஆனில் கூறும் கருநிலையின் படிநிலைகளை; அதிசயம்> திருக்குர்ஆனில் கூறும் வலி உணரும் தோல்கள் அதிசயம்> திருக்குர்ஆனில் கூறும் கை ரேகை அதிசயம்.


திருக்குர்ஆனில் மனிதனை ஆச்சரியத்தின் விளிம்பிற்கு இட்டுச் செல்லக் கூடிய இன்னும் ஏராளமான வசனங்கள் நிறைந்து கிடக்கின்றன அவைகளை எடுத்துக் கூறி அதிசயம் என்றும் அல்லாஹ்வின் அற்புதம் என்றும் கூறுங்கள். அவர்களால் இது கண்டிப்பாக முடியவே முடியாது.

உணர்வுக்கு எழுதியக் கட்டுரை




وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

புதன், டிசம்பர் 21, 2011

காலைக் கழுவி விடும் போப்புகள்...


ஈயத்தைப் பார்த்து இளிக்கும் பித்தளைகள்.

மேற்கானும் அரச குடும்பத்தினரின் காலைக் கழுவி விட்டுக் காலில் முத்தமிட்டு காலில் விழுந்து கும்பிடும் வழிகேடர்கள். அவ்வப்பொழுது உலகம் போற்றும் உத்தம சீலர் உண்ணத தலைவர் மாமனிதர்(ஸல்) அவர்களை மணம் போனப் போக்கில் சீண்டுவார்கள். அவ்வாறு சீண்டுவதற்கு இவர்களுக்கு கொஞ்சமேனும் தகுதி இருக்கிறதா ? என்பதை மேற்கானும் சித்திரங்கள் பறைசாற்றுவதை கவனிக்கலாம்.

மாமனிதர் நபிகள் நாயகத்தின் வரலாற்றில் ஓர்நாள் :
முஆத் பின் ஜபல் என்கிற நபித்தோழர் வியாபார ரீதியாக வெளிநாடுகளுக்கு சென்று திரும்பி வருகிறார்கள் நபிகள் நாயகம் அவர்களிடம் கீழ்கானுமாறு கூறுகிறார்கள்

ஏக இறைவனின் திருத்தூதர் அவர்களே ! நான் பல நாடுகளுக்கும் வியாபார நிமித்தம் சென்றுள்ளேன் அங்கெல்லாம் மக்கள் அவர்களுடைய மன்னர்களுக்கு குனிந்து சாஷ்டாங்கம் செய்வதைக் கண்டேன் உங்களுக்கு சாஷ்டாங்காம் செய்யலாமா ? நீங்களோ இறைவனுடைய தனிப்பெரும் தூதர் அதற்கு தாங்கள் மிகவும் தகுதியானவராயிற்றே எனக்கூறுகிறார்கள்

அதற்கு நபியவர்கள் : முஆதே ! இந்த மடமையிலிருந்து மனிதர்களை விடுவிக்கவே நான் நபியாக உலகுக்கு அனுப்பப்பட்டுள்ளேன். உலகில் யாராவது யாருக்காவது சாஷ்டாங்கம் செய்யலாம் என இருந்தால் மனைவியை கணவனுக்கு சாஷ்டாங்கம் செய்யச் சொல்லி இருப்பேன் ஆனாலும் அது இறைவனுக்கே உரிய தனி உரிமையாகும் என்பதால் அதையும் தடை செய்கிறேன். நபிமொழி

மடமைக்கு அந்த இடத்திலேயே சாவுமணி அடித்தார்கள் அதனால் இன்று உலகில் வாழும் 75 சதவிகிதத்திற்கு மேலான மக்களுடைய மனதில் நபிகளார் நீங்காத இடம் பெற்றவர்களானார்கள்.

நபிகள் நாயகத்தின் வரலாற்றில் மேலும் ஒரு நாள்.
நபிகள் நாயகம் ஒரு சபைக்கு வருகிறார்கள் அப்பொழது அவர்களைக் கண்டதும் அவர்களுடைய தோழர்கள் எழுந்து நிற்கிறார்கள் எழுவதைக் கண்டதும் நபிகளார் தடுக்கிறார்கள். எவரொருவர் அல்லாஹ்வின் அடிமைகள் தனக்கு எழுந்து நிற்பதைக்கண்டு சந்தோஷம் அடைகின்றாரோ அவர் தன்னுடைய இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும். நூல் புகாரி.

எனக்கூறி அங்கேயே மனிதனுக்கு மனிதன் எழுந்து நிற்கும் மரியாதை எனும் அடக்கு முறையை ஒடுக்குகிறார்கள்> மரியாதை நிமித்தம் எழுந்து நிற்பதை ஏற்றுக்கொள்கிற மனிதன் தனது இருப்பிடத்தை நரகில் ஆக்கிக்கொள்ளட்டும் என்றால். தனதுமுன் நெடுஞ்சான்கிடையாக மனிதர்களை வீழ்ந்து கிடக்கவைத்த உங்களுடைய நிலை நரகில் எதுவாக இருக்கும் ? ? ?


இறைவனின் இறுதி நபியின் வாழ்வில் மேலும் ஒரு நாள்
ஒரு திருமனத்திற்கு நபியவர்கள் செல்கிறார்கள் அங்கு ஒருசிறுமி நபியவர்களைப் புகழ்ந்து பாடுகிறாள். அப்பாடலை நபிகள் நாயகம் செவியேற்றதும் உடனடியாக நிருத்தும்படிக் கோருகிறார்கள் அத்துடன் மரியமின் மகன் ஈசாவை (ஏசுநாதரை) புகழ்ந்தது போல் என்னைப் புகழாதீர்கள் நான் மரணித்தப்பின் எனதுகல்லறையை வணங்குமிடமாகஆக்கிவிடாதீர்கள்.மிஷ்காத். எனக்கூறி சமாதி வழிபாட்டிற்கு அங்கேயே சமாதி கட்டி விடுகிறார்கள்.

  • அண்ணல் நபியவர்கள் தான் பிறரால் புகழப்படுவதை தடை செய்தார்கள்>
  • தனக்குப் பிறர் எழுந்து நிற்பதை தடை செய்தார்கள்>
  • தனக்கு சாஷ்டாங்கம் செய்வதை தடை செய்தார்கள்.

மேற்கூறப்பட்டவைகள் மனிதர்களால் தன்னைப்போன்ற பிற மனிதனுக்கு நிகழ்த்தப்பட்டால் சகோதரத்துவம் குழி தோண்டிப் புதைக்கப்படும் அதனால் அவைகளை நபிகள் நாயகம் வாழும் காலத்திலேயே அவைகளை குழி தோணடிப் புதைத்தார்கள் . அதனால் இன்று அவர்கள் மாமனிதர் எனும் அந்தஸ்தில் நிலைத்துள்ளார்கள். அத்துடன் அவர்கள் அறிமுகப்படுத்திய சகோதரத்துவம் இன்றளவும் கிஞ்சிற்றும் சிதறாமல் நிலைபெற்றுள்ளன அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்.

கிருஸ்துக்குப்பின் 15 நூற்றாண்டுகள் உலகை கிருஸ்தவ திருச்சபை கோலோச்சியது. அந்த 15 நூற்றாண்டுகள் காரிருள் சூழ்ந்த காலம் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடு;கிறார்கள்.

காரிருள் சூழ்ந்த அந்த காலகட்டத்தில் தான் இறைவன் அவர்களிலிருந்தே விஞ்ஞானிகளை உருவாக்கினான். அவ்வாறு உருவான விஞ்ஞானிகளை கிருஸ்தவ பாதிரிகள் காட்டுமிராண்டித் தனமாக கொலை செய்தார்கள்.

ஏன் கொலை செய்தார்கள் ?

அவர்கள் கண்டு பிடித்துக் கூறும் அறிய தகவல்கள் அவர்களுடைய பைபிளில் கூறப்படாதது தான் முக்கிய காரணம்.

அதனால் தான் முதன் முதலில் உலகம் உருண்டை என்றுக்கூறிய கலிலியோ அடித்தேக் கொல்லப்பட்டான்.

வல்ல அல்லாஹ் மேலும் மேலும் பல விஞ்ஞானிகளை அவர்களிலிருந்தே உருவாக்கி அறிய பல தகவல்களை உலகுக்கு கொடுக்கச் செய்தான்.

அவ்வாறு உலகுக்கு கொடுக்கச் செய்த அனைத்து தகவல்களும் 1400 ஆண்டுகளுக்கு முன்பே தனது இறுதி வேதமாம் திருக்குர்ஆனில் கூறி விட்டான்.

இறைவன் ஏன் தொடர்ந்து விஞ்ஞானிகளை அவர்களிலிருந்தே உருவாக்கினான் ?

அவர்கள் ஆராயச்சி செ;யது கூறும் அறிய தகவல்கள் குர்ஆனில் சொல்லப்பட்டு விட்டதால் குர்ஆன் அல்லாத வேதக்காரர்களைக் கொண்டு ஆராயச் செய்து அவர்கள் ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்த அறிய தகவல்கள் எந்த வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதோ அதுவே இறைவேதம் என்பதை அவர்கள் விளங்கிக் கொள்வதுடன் வல்ல அல்லாஹ் அவர்களைக் கொண்டே உலகுக்கு அவைகளை அறிவிக்கவும் செய்தான்.

அவர்களுக்கு உண்மை தெளிவாக வேண்டும் என்பதற்காக பல பாகங்களிலும், அவர்களுக்கு உள்ளேயும் நமது சான்றுகளை அவர்களுக்குக் காட்டுவோம் உமது இறைவன் ஒவ்வொரு பொருளையும் பாரத்துக் கொண்டிருக்கிறான் என்பது Nபுhதுமானதாக இல்லையா திருக்குர்ஆன்:  41:53      
கவனத்தில் கொள்க! அவர்கள் தமது இறைவனை சந்திப்பதில் சந்தேகத்திலேயே உள்ளனர். கவனத்தில் கொள்க! அவன் ஒவ்வொரு பொருளையும் முழுமையாக அறிபவன.; திருக்குர்ஆன்: 41:54.     




وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்