வியாழன், ஜனவரி 26, 2012

24. லட்சம் ரூபாய் செலவில் எம்.ஜி.ஆருக்கு மீண்டும் ஒரு கோயில் (?)


சென்னையை அடுத்த திருநின்றவூரில் 24. லட்சம் ரூபாய் செலவில் எம்.ஜிஆருக்கு கோயில் கட்டப்பட்டு கோயிலின் உட்புறத்திலும், கோபுரத்திலும் எம்.ஜி.ஆர் சிலைகள் அமைக்கப்பட்டு ஐயர்கள் வேத மந்திரங்கள் ஓதி பூ, பழங்களுடன் தீபாராதனை ஏற்றி 108 குடங்களில் பாலாபிpஷேகம் செய்யபட்டு ஏராளமான பக்த(ரசிக)ர்கள் பயபக்தியுடன் எம்.ஜி.ஆர் சாமியை கும்பிட்டனராம். இதற்கு முன்னர் சென்னை பெரம்பூரில் அருள்மிகு எம்.ஜி.ஆர் ஆலயம் என்றப்பெயரில் முதல் கோயில் உள்ளது.


குஷ்புக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய பெருமை தமிழ்நாட்டுக்குரியது குஷ்பு ஃப்ரீ செக்ஸை ஆதரித்துப் பேசியதுடன், தமிழ்நாட்டுப் பெண்களும் இதில் சளைத்தவர்கள் அல்ல என்றக் கருத்தையும் சேர்த்துக்கூறி இருக்காவிடில் இந்நேரம் குஷ்புவின் கோயில்களின் கிளைகள் திருச்சியிலிருந்து கன்னியாகுமரி கடைக்கோடி வரை பரவி இருக்கும். ஃப்ரீ செக்ஸை ஆதரித்துப் பேசியதுடன் மட்டும் விட்டிருந்தால் கூட மக்கள் கண்டு கொண்டிருந்திருக்க மாட்டார்கள் ஆனால் தமிழ் சென்டிமென்டில் கை வைத்ததால் தான் குஷ்பு கோயில் திருச்சியுடன் நின்று விட்டது.

ஆனால் எம்.ஜி.ஆர்.கோயில் தமிழ்நாடு முழுவதும் பல கிளைகளைக் கொண்டதாக ஆவதற்கு அதிகம் வாய்ப்பிருக்கிறது காரணம் அவர் சினிமாவில் நல்லவராக, வல்லவராக நடித்தார் என்பதற்காக அல்ல. தமிழ் நாட்டு மக்கள் மொழி வெறியர்கள் என்பதை ஆரம்பத்திலேயே நன்றாக அறிந்து வைத்திருந்த கேரளத்து எம்.ஜி.ஆர் மூச்சுக்கு முன்னூரு தடவை தமிழ் தமிழ் என்று முழங்கி மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்து விட்டாலும் என் பேச்சிருக்கும் என்றுப் பாடி தமிழ் மக்களை தமிழால் குளிப்பாட்டி தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.

கொஞ்சு தமிழ் பேசும் தஞ்சை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த பச்சைத் தமிழன் சூரக்கோட்டை கனேசன் (சிவாஜி) சொந்த தொகுதியில் டொசிட்டை இழந்து ஒரு எம்.எல்.ஏ. வாகக் கூட வர முடியாததற்கு தமிழ் சென்டிமென்டை அவ்வளவாக சினிமாவில் அவர் டச் பண்ணாமல் விட்டதுதான் காரணம்.

இன்று எப்படியாவது ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து விடவேண்டும் என்பதற்காக தமிழ் என்றும், தமிழனம் என்றும் ஓயாமல் ஒப்பாரி வைக்கும் வை.கோ, சீமான் வரிசையில் ராமதாசும், இறுதியாக ஜவாஹிருல்லாஹ் சாரும் இணைந்து விட்டதை அறியலாம்.

மருதூர் கோபால மேனனின் மகன் இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) ஒரு மலையாளி என்பதுடன் தமிழ்நாட்டில் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் போது தமிழ் தமிழ் என்று கூவிக் கொண்டிருக்கும் போது அவருக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தது கேரளத்து பாலக்காட்டைச் சேர்ந்த பார்க்கவி என்கின்ற தங்கமணியாவார். தமிழர்களின் இதயதெய்வம் என்று தன்னை அறிமுகப்பத்திய எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டு அனாதை ஆசிரமத்திலிருந்து ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்காமல் கேரளத்து சகோதரி மகள் கீதாவை தத்து எடுத்து வளர்த்தார் அவரது கணவர் மதுமோகனும் மலையாளி ஆவார். சாவதற்கு முன்னரே அவரது பலகோடி மதிப்புள்ள ராமாவரம் பங்களாவை அவரை சிம்மாசனத்தில் அமர்த்தி அழகுப் பார்த்த தமிழ்நாட்டு ஏழைகளுக்கு பங்கிட்டுக் கொடுக்காமல் கேரளத்து கீதாவையும், மதுமோகனையும் குடியமர்த்தி விட்டு செத்து விட்டார்.

தான் ஒரு சிறந்த தமிழினக் காவலன் என்பதை இன்னும் அழுத்தமாக தமிழ்நாட்டு மக்களிடம் விதைப்பதற்காக இரத்த வெறிப் பிடித்த பிரபாகரனை வரவழைத்து தமிழீழம் உருவாக்குவதற்காக பிரிவினைப் போராட்டத்தை வலுப்படுத்தவும் அதற்கு தேவையான நிதி உதவிகளை செய்வதாகவும் வாக்களித்தார். பாலா, பேபி சுப்ரமனியன், சங்கரன் குழுவினருடன் 1984 ஏப்ரல் மாதம் எம்.ஜி.ஆரை சந்திக்கச் சென்ற பிரபாகரன் எம்.ஜி.ஆரிடம் நேரடியாக இரண்டு கோடி ரூபாய் கேட்க மறுப்பின்றி உடனேக் கொடுத்து இன்னும் தேவைப்பட்டாலும் கேளுங்கள் தருகிறேன் போராட்டத்தை வீரியப்படுத்துங்கள் என்று ஆக்கமும், ஊக்கமும் அளித்தார். அன்று எம்.ஜி.ஆர் அவ்வளவுப் பெரியத் தொகையை தந்திருக்கவில்லை என்றால் எங்களது எல்.டி.டி.இ அமைப்பு இத்தனை வீரியம் பெற்றிருக்காது என்று பிரபாகரனே பேட்டி அளித்திருந்தார்.

காத்தான் குடி பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த நிராயுதபானி முஸ்லீம்களை இரத்த வெறிப் பிடித்த புலிகள் குருவிகளை சுடுவது போல் சுட்டுத் தள்ளிய பொழுதும், யாழ்பானத்திலிருந்து மொத்த முஸ்லீம்களையும் விரட்டி அடித்த பொழுதும் இனவெறியர் எம்.ஜி.ஆர் உயிருடன் தான் இருந்தார். நான் இதற்காக பணம் கொடுத்து உதவ வில்லை உங்கள் இலக்கை மாற்றுங்கள் என்று ஒரு வார்த்தை பிரபாகரனிடம் எம்.ஜி.ஆர் கூறவில்லை. அப்பாவி முஸ்லீம்களின் துஆ இனவெறிப் பிடித்த எம்.ஜி.ஆரின் பணத்தால் வளர்ந்த எல்.டி.டி.யினாலேயே இலங்கையில் இன்று தமிழனம் அழிந்தது.

இத்துடன் விட்டாலாவதுப் பரவா இல்லை எனலாம் மக்கள் தன்னை கேரளாவுக்கு விரட்டி அடித்து விடக்கூடாது என்பதற்காக தான் ஒரு தமிழனக் காவலன் என்பதை மக்கள் மனங்களில் இன்னும் ஆழமாக விதைப்பதற்காக தமிழ்நாட்டு தீவிரவாதி ராமகோபாலனை வரவழைத்து இந்து முன்னனியை வலுப்படுத்தவும் தமிழ்நாடு முழுவதும் ஹிந்து எழுச்சி மாநாடுகளை நடத்துவதற்கும் ஆக்கமும், ஊக்கமும் அளித்தார் இதை அவரே சட்ட சபையிலும் ஒத்துக்கொண்டார் (பொருளாதார உதவி செய்தாரா என்பது தெரியவில்லை ).

இது ஏற்கனவே அறியப்பட்ட விஷயங்களாக இருந்தாலும் இன்றும் முஸ்லீம்கள் சினிமா நடிகர்களின் பின்னால் போய்க்கொண்டிருப்பதும் அவர்களில் சிலர் அரசியலில் வரும் பொழுது மறற் சமுதாயத்தவரை விட முஸ்லீம்கள் பேராதரவு அளித்து வருவதும் எம்.ஜி.ஆர் முதல் இன்றைய விஜயகாந்த வரை தொடருவதால் இது ஆபத்தானது என்பதை உணர்த்துவதற்காக எழுதப்படுகிறது. 

இன வெறி, மொழி வெறியைத் தூண்டி தீவிரவாதத்திற்கு வித்திட்டது மட்டுமல்லாமல் அனைவரும் கத்தியுடன் திரியுங்கள் எதிர்ப்பவர்களை சொருகி விடுங்கள் (போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டுகளை இழுத்துப்பூட்டி விடலாம்) என்று தமது ரெத்தத்தின் ரெத்தமான உடன் பிறப்புகளுக்கு ரெத்த வெறி ஊட்டினார்.

இத்தனைப் பெரிய லூசுக்கு, அரைவேக்காட்டுக்குத் தான் தமிழகத்தில் கோயில்கள் கட்டப்பட்டு எம்.ஜி.ஆர் சாமிக்கு ஜே போடத் தொடங்கி விட்டனர் அப்பாவி தமிழர்கள்.

கோயிலுக்குள்ளே இருக்கும் சிலைக்கு சொந்தக்காரர் ஒரு கூத்தாடி என்பதும், இனவெறியர், மொழி வெறியர் என்பதும் இந்த தலைமுறையினருக்கு மட்டுமேத் தெரியும் இன்னும் இரண்டு அல்லது மூன்று தலைமுறைக்குப் பின்னர் இந்த கோயில் உண்டியலின் வருமாணத்தை வைத்து வயிறு வளர்க்கும் பார்ப்பனக் கூட்டம் இது கூத்தாடி எம்.ஜி.ஆர் அல்ல ஸ்ரீ வீர கோபால மேனன ராஜ ராஜேஸ்வர  ராமச்சந்திர பகவான் என்றுப் பெயரை மோடிஃபை செய்து இவர் சினிமாவை எதிர்த்து போராட்டங்களை நடத்தி சிறை சென்ற சீர்திருத்தவாதி என்றும் சீரழிவுக் கலாச்சாராத்தை வெறுத்து துறவரம் பூண்டவர் என்றும் உல்ட்டா பில்டப் செய்து எழுதி வைக்கலாம்.

ஏன் என்றால் இதிலிருந்து மூன்றாவது நான்காவது தலைமுறையினரிடம் புருடா விடும்பொழுது டப்பாங்குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடிய எம்.ஜி.ஆர் தான் இவர் என்று சாட்சியாவதற்கு நாம் இருக்கப்போவதில்லை.
  
இப்படித் தான் இன்றைய தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய அளவில் உள்ள பிரசத்திப்பெற்ற ஹிந்து கோயில்கள், முஸ்லிம் தர்ஹாக்களில் அடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற  மஹான்(?)களின் பெயரில் எழுதி வைக்கப்பட்டுள்ளப் புல்லரிக்கும் சரித்திரங்களுமாகும். 
 
இவைகள் எல்லாம் உலட்டா பில்டப் என்பதற்கு கஃபத்துல்லாஹ்விற்குள் இப்ராஹீம்(அலை) அவர்களும், இஸ்மாயில்(அலை) அவர்களும் அம்பெய்து குறிகேட்பது போல் சித்திரம் வரைந்து ஜோதிடத்தை கடவுள் அனுமதித்திருப்பது போல் மக்களை ஏமாற்றி வயிறு வளர்த்தக் கூட்டத்தை இதுப் பொய் என்றும் இவ்வாறு அவர்கள் இருந்ததில்லை என்றும் இறைச்செய்தியை பெற்றுக் கொண்டிருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறி அச்சித்திரங்களை அழிக்க உத்தரவிட்டது மிகப்பெரிய உதாரணமாகும்.


அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் அவர்கள் ஏமாற்ற நினைக்கின்றனர். (உண்மையில்) தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை. திருக்குர்ஆன்.2:9




وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்