வியாழன், ஜனவரி 26, 2012

மாம்பழ விநாயகர். (ஹிந்து அதிசயங்கள் )



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... 


இலங்கை கல்முனையில் ஒரு வீட்டில் வளர்ந்து வரும் மாமரம் ஒன்றில் ஒரு சில மாம்பழங்கள் யானையின் தும்பிக்கை சுருண்டிருப்பதைப் போன்று காட்சி அளித்திருக்கிறது. அது சிங்களவர் வீடல்லாது ஹிந்து சகோதரர் வீடு என்பதால் சொல்லவா வேண்டும். ?


அந்த மாம்பழங்கள் பயபக்தியுடன் பறிக்கப்பட்டு பாதுகாப்பாக எடுத்துச் சென்று பக்கத்தில் புலவி என்ற இடத்தில் நிறுவப்பட்டுள்ள விநாயகர் கோயிலில் எவர் சில்வர் தட்டில் பூக்கள் மற்றும் பூஜை பொருட்களுடன் வைத்து விநாயகர் பக்தர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு விநாயகர் பக்தர்கள் புடை சூழ வந்து பூஜை செய்து விட்டு மாம்பழ விநாயகரை அதிசயமாக பார்த்து செல்கின்றனராம்.(விநாயகர் பக்தர்களுடைய பக்தி எப்படிப்பட்டது என்பது அனைவரும் அறிந்தது தான் என்பது தனி விஷயம்) 


நல்ல வேளையாக அது தமிழ்நாட்டில் தோன்ற வில்லை. தமிழ் நாட்டில் மட்டும் தோன்றி இருந்தால் இதுவரை என்னென்வோ நடந்து முடிந்திருக்கும் ராமகோபாலன் வகையறாக்கள் அவற்றை தலையில் தூக்கிக்கொண்டு ஐஸ்ஹவுஸ் பள்ளிவாசல் வழியாக மேலதாளத்துடன் எடுத்துச் செல்ல போலீஸில் அனுமதிக்கேட்டு அடமாய் அடம் பிடித்திருப்பர் போலீஸ் மறுத்திருந்தால் அம்மா(?)அனுமதி கொடுத்திப்பார். 


நம்மவர்களிலும் சிலர் மீன் வயிற்றில் கலிமா எழுத்துக்கள் இருப்பதாகவும்> மாட்டின் கண்களில் கலிமா எழுத்துக்கள் தோன்றுவதாகவும்> வரிசையாக வளர்ந்துள்ள மரங்களின் அடி பாகங்கள் கலிமா எழுத்துக்களைப் போல் வளைந்து காணப்படுவதாகவும் இவைகள் இஸ்லாமிய அதிசயங்கள் போல பரப்புவார்கள். இவைகள் இஸ்லாமிய அதிசயங்கள் என்றால் அவைகளும் ஹிந்து அதிசயங்கள் தான். 


தாவரங்கள் சிலவற்றிலும்> உயிர் பிராணிகள் சிலவற்றிலும் இதுப் போன்ற காட்சிகள் ஏராளம் காணலாம் அதனால் இவைகளை மார்க்க அதிசயமாக பரப்ப வேண்டாம். அவர்களிடத்தில் சரக்கு இல்லை என்பதால் இதுப்போன்றவைகளை அதிசயம் என்றும் கடவுளின் அற்புதம் என்றும் கூறிப் பரப்புகின்றனர். 


நமக்கு திருக்குர்ஆனின் வசனங்களே அதிசயம் திருக்குர்ஆனில் கூறும் பிரபஞ்சத்தின் தோற்றம் அதிசயம்> திருக்குர்ஆனில் கூறும் கருநிலையின் படிநிலைகளை; அதிசயம்> திருக்குர்ஆனில் கூறும் வலி உணரும் தோல்கள் அதிசயம்> திருக்குர்ஆனில் கூறும் கை ரேகை அதிசயம்.


திருக்குர்ஆனில் மனிதனை ஆச்சரியத்தின் விளிம்பிற்கு இட்டுச் செல்லக் கூடிய இன்னும் ஏராளமான வசனங்கள் நிறைந்து கிடக்கின்றன அவைகளை எடுத்துக் கூறி அதிசயம் என்றும் அல்லாஹ்வின் அற்புதம் என்றும் கூறுங்கள். அவர்களால் இது கண்டிப்பாக முடியவே முடியாது.

உணர்வுக்கு எழுதியக் கட்டுரை




وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்